People I know

Friday, July 28, 2006

அறிந்தும் அறியாமலும்

நண்பன் ஒருவன் ஒருமுறை சொன்னான் நமக்கு விருப்போ வெறுப்போ ஒரு பொருளை தெரியாத வரை மட்டுமே இருக்கிறது, முற்றும் புரிந்து கொண்டுவிட்டால் அதனுடன் சமாதானம் மட்டுமே கொள்ள முடியும் விருப்பு வெறுப்பு ஏற்படுவதில்லை. அவன் சொன்னது யோசித்து பார்த்தவரை சரியென்றே பட்டது. இருந்த போதிலும், நமக்கு தெரியாத விஷயங்களை எண்ணிப் பார்க்கும் போது தெரிந்த விஷயங்கள் கடற்கரையில் ஒரு மணல் துளி அளவே இருக்கிறது. தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதின் மூலமாக தீர்க்க முடியும் என்பது இயலாத காரியம். அதணால் மனிதன் தனக்கு தெரியாதற்கெல்லாம் ஒரு பெயர் வைத்துவிட்டான். தனக்கு தெரியாததெல்லாம் ஒரு உருவத்திற்குள் அடைத்து அதற்க்கு கடவுள் என்று பெயர் வைத்துவிட்டான். காரணம் தெரியாமல் ஏதேனும் நடந்துவிட்டால் "கடவுள் செயல்", நமக்கு பிரச்சனைக்கு தீர்வு தெரியவில்லையென்றால் "அவன் இருக்கான் பாத்துப்பான்" என்கிறான்.

தெரியாதவைகள் மிகவும் பயமுறுத்துகின்றன சிலநேரம். வீட்டில் பெண் பிள்ளையோ, கடைகுட்டியோ நேரத்துக்கு வரவில்லை என்றால் "கடவுளே பத்திரமாக அழைத்து வந்துவிடு" என்று தெரியாததை வெண்டுகிறோம். பயமுறுத்திய தெரியாததே தான் பயம் போக்குவதாகவு ஆவதை காண்கிறோம். சில சமயம் தெரியாதது நமக்கு இருட்டாக தெரிகிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது. ஆனால் சில சமயம் தெரியாததே ஒளிமயமாகவு தெரிகிறது. "தெரியாதது" எல்லா வகையான எதிர்மறை (paradoxical) குணங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. அதன் இருப்பு சத்தியாமாக கண்ணுக்கு தெரிந்தாலும், சில தெரியாதவர்கள் தெரியாததன் இருப்பை ஒப்புக் கொள்வதில்லை. எனக்கு தெரிந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பவர்கள்து வாதம் self contadicting என்பதை அறிவதில்லை. தெரியாததை நாங்கள் கடவுள் என்கிறோம், நீ எதை தெரிந்துக்கொண்டாலும் அது கடவுளாக இருக்க முடியாது. அப்பொழுது நாத்திக வாதம் சொத்தையாக படுகிறது.

ஆமாம், கடவுள் என்பது தெரியாத பொருளே தான். அதை உணர மட்டுமே இயலும், தெரிந்துக்கொள்ள முடியாது. இப்படி எல்லாம் யேசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நண்பன் ஒருவன் ஞாயபகம் வந்தது. அவன் தனக்கு தெரியாதற்கெல்லாம் "ஹிந்தி" என்று பெயர் வைத்திவிடுவான். வெள்ளைகாரர் ஆங்கிலத்தில் சொல்வது புரியவில்லை என்றால் கூட "இந்த ஆள் எப்படி ஹிந்தில பேசறார்னே புரியல" என்பான். என்ன செய்வது தெரிந்த விஷயங்களை நாம் படுத்துகிறோம், தெரியாதவைகள் நம்மை படுத்துகின்றன.

Friday, July 21, 2006

We need POTA

Three persons were arrested for their alleged invlovement in mumbai bomb blast. Hindu says this

"All the three were booked under Sections 302 (murder), 307 (attempted murder), 147 (rioting), 148 (rioting with deadly weapons), 149 (unlawful assembly) and 326 (grievous assault) of the Indian Penal Code along with related sections of the Explosive Substances Act, Indian Explosives Act and Indian Railways Act."

I don't know how easy for them to get bail and escape from clutches of punishment under these laws. If POTA was there they could have been easily arrested under POTA without any investigation. We are in such a situation, where we need such laws. Hope centrl goverment comes up again with strict laws to deal with terrorism and terrorists.

Anyways, it is party time for extremeists again in tamlnadu. An extremists named Madani who has been detained for various anti social activities including kovai bomb blasts, is being given ayurvedic treatment and might be released soon on humanitarian grounds by MK govt. I don't know how politicans think such acts can fetch them minority votes. It is not just they are putting us under terror, but also humilaiting minorities. God save India and Tamilnadu.

Sunday, July 16, 2006

Email from devaram yahoo group.

Recently I received this email from devaram yahoo groups to which I subscribe. People who beleive in temple culture and aagamas should read it. After reading what? I dunno?

----------------------------------------------------------------------------------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
நாட்டுக்கு நல்லதல்ல
திருக்கோயில்களின் அர்ச்சகர்களாக அனைத்து ஜாதியினரும் நியமக்கப்படுவர் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு இந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலயங்களின் அமைப்பு, நித்திய பூஜை விதிகள், உற்சவங்களை நடத்தும் முறைகள், பூஜை செய்வதற்குரியவர் தகுதிகள், பிராயச்சித்த விதிகள் ஆகிய அனைத்தினையும் வரையறுக்கும் சட்ட நூல்கள் சிவாகமங்களாகும். சிவபிரானின் திருவாக்காகிய 28 சிவாகமங்களின் படியே சிவாலய பூஜை நடைபெற்று வருவது தொன்மையான மரபாகும். சான்றாக, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரர் ஆலயம் காமிக ஆகம முறைப்படி பராமரிக்கப்படுகிறது. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயிலின் சட்ட நூல் காரணாகமம். தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குரியது காமிக ஆகமம். திருவீமிழலை ஆலயம் காரணாகம விதிப்படி பாதுகாக்கப்படுகிறது. ஆதி சைவப் பிராமணர்கள் அல்லது குருக்கள் அல்லது பட்டர் என்று அழைக்கப்படுவார் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு அபிஷேக வழிபாடு செய்யத் தகுதியுடையவர் என்றும் பிற எவரும் அப்பணியைச் செய்யக் கூடாது என்றும் சிவாலய சட்ட நூல்களாகிய சிவாகமங்கள் விதிக்கின்றன. "முப்போதும் திருமேனி தீண்டுவார்" என்று ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் அச்சிவாசாரியப் பெருமக்களைப் போற்றுகிறார். சிவாகமங்களுக்கு விரோதமாக ஆதிசைவப் பெருமக்கள் தவிரப் பிறர் சென்று பூஜிக்க அந்த ஆகமங்கள் அனுமதிக்கவில்லை. சிவாகமங்களின் விதியை மீறி நடக்க முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
ஆதிசைவப் பிராமணர்களைத் தவிர வேறு பிராமணர்கள் கூடக் கருவறையுள் நுழைய முடியாது. சங்கராச்சாரிய சுவாமிகள் கூட சிவாலயக் கருவறையில் செல்ல, மூலவரைத் தொட்டு பூஜிக்க உரிமை கிடையாது. எண்ணற்ற சிவாலயங்களைத் தமது ஆளுகைக்குள் கொண்ட சைவ ஆதீனங்களாகியத் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகியவற்றின் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானங்கள் கூட ஆதீனத் திருக்கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. செல்லவும் மாட்டார்கள். பாரத நாட்டின் ஜனாதிபதியாக இருந்த திருமிகு.வெங்கட்ராமன் அவர்கள் (பிராமணராக இருப்பினும்) சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான் பொன்னம்பலத்திற்குள் செல்ல வேண்டுமாயின் சட்டையைக் கழற்றி வருமாறு அவ்வாலய தீட்சிதர்களாகிய அர்ச்சகர்கள் வலியுறுத்திய நிகழ்ச்சி செய்தித்தாளில் வந்தது. ஆதீன மடாதிபதிகள் செல்லாத கருவறைக்குள் ஆதிசைவப் பிராமணரையன்றி மற்றவர்களை அனுமதிக்க முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயில் கட்டிய பெருமையுடைய ராஜராஜ சோழ மன்னர் ஆதிசைவப் பிராமணர்களையே பூஜகராக நியமித்து அவர்கள் வாழ்க்கைக்கு நிலமான்யம் செய்து கொடுத்துள்ளார். பராக்கிரம பாண்டிய மன்னர் கட்டிய தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயப் பூஜை பொறுப்பினை ஆதி சைவப் பிராமணர்களிடமே ஒப்படைத்தார். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரலிங்கப் பெருமான் திருக்கோயில் எழுப்பிய உக்கிரபாண்டிய மன்னர் பிரான் சிவாசாரிய பெருமக்களையே அர்ச்சகராக நியமித்து அவர்கள் ஜீவனாம்சமாக நிலபுலன்கள் எழுதி வைத்துள்ளார். இதைப் போலவே, நமது தமிழக மன்னர் பெருமக்களும் தாங்கள் கட்டிய ஆலய நித்திய பூஜை முறையினை சிவாகம சட்டப்படி சிவாச்சாரியார்களிடமே விட்டுள்ளனர். அந்த மன்னர்கள் யாருமே பிற சாதியினரை அர்ச்சகராக்கவில்லை. அவர்கள் பேணிப் பாதுகாத்த சிவாகமப் பாரம்பரியத்தை உடைத்தெறிய முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தமிழக இந்து மக்களுக்கோ, இதைப் பற்றிய அக்கறை கிடையாது. பொறுமை, சகிப்புத்தன்மை, திருக்கோயில் பற்றிய அலட்சியப் போக்கு இவை தாம் தமிழக இந்து மக்களின் மறுபெயர். சாதி, சினிமா, அரசியல் ஆகியவற்றில் காட்டும் அளவுக்கு மீறிய ஈடுபாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சமயங்களின் நிலை குறித்து அக்கறை காட்ட மாட்டார்கள். டென்மார்க் கார்ட்டூன் விஷயத்தில் கொதித்து எழுந்த இஸ்லாமிய சகோதரர்களைப் பார்த்து லட்சத்தில் ஒரு பங்கு கூட தங்கள் மதத்தில் அபிமானம் காட்ட மாட்டார்கள் இந்துக்கள். "தி டாவின்சி கோட்" திரைப்பட விஷயத்தில் கிறிஸ்தவர்கள் பொங்கி எழுந்த காட்சியாவது இந்துக்களை மாற்றுமா? வருஷத்திற்கு ஒரு முறை கொடை நடத்தி விடுவது, திருவிழாக்களுக்குச் சென்று உண்டியல் போட்டு விட்டுத் திரும்புவது இவற்றோடு ஆலயங்கள் பற்றிய சிந்தனை இந்து மக்களிடம் இருந்து விடை பெற்று விடும். எனவே இந்து மதத்தவர்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.
தமிழக அரசியல் கட்சிகள் இவ்விதத்தில் ஆலய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்ற முன்வருமா? அது எப்படி வரும்? "மதச் சார்பற்ற தன்மை" என்ற கற்பின் உச்ச நிலையில் இந்துக்களைப் பொறுத்த வரையில், நிற்பவை அக்கட்சிகள். ஓட்டு வங்கியின் இருப்பினை அதிகரிக்கும் கட்டாயத்தில் உள்ள அவை இந்துக் கோயில்களின் பெருமை மிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒருநாளும் முன்வரமாட்டாதவை. 'இந்துத்துவா' வை உயிராகக் காட்டும் கட்சி கூட இவ்விஷயத்தில் செயல்படும் விதம் வேடிக்கை கலந்த வேதனையைத் தருகிறது.
தமிழக இந்து அறநிலயத்துறை ஆட்சியின் கீழ்வரும் 30,000 திருக்கோயில்களில் சுமார் 100 ஆலயங்களில் பணியாற்றும் சிவாச்சாரியப் பெருமக்களுக்குத்தான் நல்ல வருமானம் கிடைக்கும். பிற ஆலய ஆதிசைவப் பிராமணர்கள் போதிய வருவாயின்றி வறுமையில் வாடுவது கண்கூடு. அந்த சொற்ப வருமானத்தையும் உதறி விட்டு ஓட ஓட விரட்டுவது நாட்டுக்கு நல்லதா? ஒரு ஆலயத்தில் 20 பணியாளர்கள் வேலை பார்த்தால் அதில் 2 பேர் தான் சிவாச்சாரியப் பிராமணர்களாக இருப்பர். மீதியுள்ள 18 பேரும் பிறசாதியர் தான். ஓதுவார் மணியம், கணக்கர், பலவேலை, மேளம், காவல், துப்புரவாளர் ஆகிய பிற பணியாளர்கள் பிராமணரல்லாதவரே. எனவே 2 பேரை விரட்டுவதைத் தவிர்த்துப் பிற 18 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாதா? 30,000 ஆலயங்களில் பணியாற்றும் ஆதி சைவர்கள் சொற்பமே. அர்ச்சகர் தவிர பிற ஊழியர்கள் அனைவரும் பிராமணரல்லாத பிறசாதியினரே. எனவே ஆதிசைவப் பிராமணர்களைப் பழி வாங்குவதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக ஆலய அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் உயர்ந்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தீர்மானித்தால் அது நாட்டுக்கு நல்லது.
ஆலய பூஜை முதலியவற்றில் நிகழும் தவறுகள் நாட்டினையே பாதிக்கும் எனப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திரு மூல நாயனார் தமது திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார். அதில் ஒரு திருமந்திரம் இதோ.
"முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே"
எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை விட்டுவிட்டுத் தமிழக ஆலயங்களில் பணியாற்றும் ஏழை சிவாச்சாரியார்களையும், எண்ணற்ற பிறசாதி ஆலயப் பணியாளர்களையும் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்துதவுமாறு வேண்டுகிறோம்.
இவண்
மா.பட்டமுத்து M.Sc., B.T.,
அமைப்பாளர்,
ஸ்ரீ கோமதி அம்பிகை மாதர் சங்கம், சங்கரன்கோவில்.
திருமந்திர வழிபாட்டு மன்றம், சங்கரன்கோவில்,
ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகள் உழவாரக் குழு, விக்கிரமசிங்கபுரம்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்குழாம், கரிவலம்வந்தநல்லூர்
ஸ்ரீ மங்கையர்க்கரசி மாதர் மன்றம், ஸ்ரீ வில்லிபுத்தூர்
ஸ்ரீ மாசிலாமணியீஸ்வரர் உழவார நற்பணிமன்ற்ம்,
வடதிருமுல்லைவாயில், சென்னை

Wednesday, July 12, 2006

Defeating terrorism..

When US news channels and BBC visited bomb hit railway station, all they got to say was"everything is normal". I was like "What else you expect in this part of the world?".
Terrorists want to strike terror in the minds of people and time and again they miserably fail. I accept our governments are always spineless when dealing with extremists. But our public know exactly how to tackle them. Each year terrorists issue warnings to those visit vaishnodevi shrine but they could not stop lakhs of people thronging the shrine.

When terrorists abducted an Indian flight to kandahar, during vajpayee's regime our defense minister went and negotiated with them. That was a national shame to me. Anyway, that flight carried a very high profile Swiss personality who prints currencies for so many nations (including USA). After the flight was released he had to say something like this "I have never seen more matured people than Indians, no one feared death and were very normal, I learnt a very important lesson from them.".
Probably every western country might learn this same lesson.

Anyway, I afraid our mentality of aping west will take away this sterling quality of ours in near future. After reading this blog about media coverage of this incident, I felt media has already started dramatising events as the do it here in west.

Monday, July 10, 2006

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரு

சம்சப்தகர்கள் என்பவர்கள் அர்ஜுனனுடன் போரிட்டு கொல்வது அல்லது வீரமரணம் அடைவது என்று சபதம் செய்து அர்ஜுனனை பதிமூன்றாம் நாள் யுத்ததில், யுத்தகள்த்திலிருந்து வெகு தூரம் இழுத்து சென்றுவிட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களை கொன்று பாசறைக்கு திரும்பும் போது பாசறையே மிகவும் அமைதியாக இருந்தது. அனைவரும் துக்கதுடன் இருந்தார்கள். மெதுவாக தர்மபுத்திரர் அபிமன்யு இறந்துவிட்ட விவரத்தை தெரிவித்தார். பத்மவ்யூகத்தில் அபிமன்யு மட்டும் தனித்தி விடப்பட்டதும், ஜயத்ரதன் மற்றவர்களை வ்யூகத்தின் வாயிலிலேயே நிறக வைத்ததால் யாரும் அவனுக்கு உதவியாக பிந்தொடர்ந்து செல்ல இயலாத நிலையில் கவுரவர்கள் கயமையால் அவனை கொண்றுவிட்டார்கள் என்று தெரிவித்தார். அந்நிலையில் துக்கம் தாங்க இயலாத சகோதரர்கள் அனைவரயும் ஏசினான், அழுது புரண்டான். அர்ஜுனன் ஒரு பெரும் சபதம் செய்தான் "நாளை சூரிய அஸ்தமனதிற்குள் ஜயத்ரதனை நான் கொல்லாவிட்டால் தீக்குளிப்பேன்" என்று சபதம் செய்கிறான்.

மறுநாள், கவுரவர்கள் ஜயத்ரதனை போர்களத்திலிருந்து ஒளித்து வைத்துவிடுகிறார்கள். கிருஷ்ணர் சூரிய அஸ்தமனம் நெருங்கி வரும் வேளையில் தனது சக்கிரத்தால் சூரியனை மறைத்து விடுகிறார். எல்லோரும் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டது என்று மகிழ்கிறார்கள். அர்ஜுனன் திக்குளிக்க தீ வளர்க்கிறான். அக்காட்சியை காண ஜயத்ரதன் அங்கே வருகிறான். கிருஷ்ணர் உடனே தனது சக்கரத்தை விலக்கி கொள்ள, சூரியன் வெளிவருகிறான். அர்ஜுனன் உடனடியாக அம்பை எய்தி ஜயத்ரதனை கொல்கிறான்.

பாசறைக்கு திரும்பிய உடனே கிருஷ்ணர் அர்ஜுனனை கோபிக்கிறார். "உணர்ச்சி வசப்பட்டு எல்லோருக்கும் சிக்கலை உண்டாக்க பார்த்தாயே, போர்கள்த்திலே இறந்து போகிறவர்களை நினைத்து வருந்தக்கூடாது, கடமையை செய் பலனை எதிர்ப்பார்காதே என்று நான் சொன்னதை மறந்து விட்டாயா?" என்றார். அர்ஜுனன் "க்ருஷ்ணா சொல்லுதல் யார்க்கு எளிது, ஆனால் சொல்லிய வண்ணம் நடப்பது மிகவும் கஷ்டம், புத்ர சோகத்தை பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ? இன்னமும் என் நெஞ்சு எரிந்து கொண்டுதான் இருக்கிறது." என்றான். கிருஷ்ணர் அவவை தனிமையில் விட்டு விட எண்ணி விலக முற்படும் போது அர்ஜுனன் திடிரென்று நினைவு வந்தவனாக "க்ருஷ்ணா, இவ்வள்வு நாளாக நீ எங்களுடன் நின்று எதிரிகளை கொல்வதற்க்கு எவ்வளவோ உதவிகள் செய்கிறாய். ஆனால் உன்னுடைய சேனையும், உன் மகன்களும் கூட துரியோதனன் பக்கம் நின்று சண்டை போடுகின்றன. உன் மகன்கள் எல்லாம் என்ன ஆனார்கள், எப்படி சண்டையிடுகின்றனர்?" என்று கேட்டான். கிருஷ்னர் "அர்ஜுனா இன்று உன் மகன் இறந்த துக்கம் தாங்காமல், நீ ஜயத்ரதனை போர்கள்த்திலே தேடுவதற்காக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தாய். நானும் அதற்க்கு உதவியாக ஆலோசனை கூறிக்கொண்டு உன் தேரை ஓட்டினேன். அவ்வாறு நீ என் மகன்களில் ஓரிருவரை தவிர எல்லோருக்கும் வீர சுவர்கம் கொடுத்துவிட்டாய். இந்த சண்டை முடியும் போது எனக்கு மகன்களே இல்லாமல் கூட போகலாம். ஆனால் நான் துக்கிப்பதில்லை. உண்மையில் யாரும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்று உனக்கு உபதேசம் செய்ததை மறந்துவிட்டாயா?" என்றான். அர்ஜுனன் "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரு" என்று காலில் விழுந்து பணிந்தான்.

*உண்மையில் கிருஷ்ணரின் மகன்களை யார் எப்பொழுது கொன்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் மகன்கள் எல்லாம் இறந்த நிலையில் க்ருஷ்ணர் துக்கிக்கவில்லை என்று தெரியும்.

Sunday, July 02, 2006

உள்ளே வெளியே

மண்டையை பிளக்கும் மத்தியான நேரத்தில் தான் என் அம்மாவுக்கு "ByPass" செய்துக்கொண்ட தன் அண்ணனை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றியது. நான் வேறு ரொம்ப வருடம் கழித்து அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதால் அம்மாவுக்கு துணையுமாச்சு, மாமாவை பார்த்தது போலவும் ஆச்சு என்று கிளம்பினேன். "எங்க போனாலும் ஆட்டோவில போடா, நீயேல்லாம் madras பஸ்ல போனா pick pocketகாரன் பேண்டையே உருவிட்டு போயிருவான்" என்ற அண்ணனின் அறிவுரைக்கு அம்மா "போடா, தாம்பரத்திலிருந்து ஆட்டோவில K.K. நகர் போறதுக்கு முந்நூறு ரூபா கேப்பான், உங்கண்ணன் கிடக்கான் அவனுக்கு வேற வேல இல்ல, பஸ்லயே போலாம்" என்று கூட்டி போனார்.

பஸ் ஏறின கொஞ்ச நேரத்தில் ஒரு "குடிமகன்" சத்தமாக தனது மனைவியை திட்டிக்கொண்டிருந்தான். "தே..யா, என்னையாடி கேள்வி கேக்குற, நான் ஆம்பளடீ எங்க வேணாலும் போவேன், வருவேன், -----------------------," (கெட்ட வார்த்தை மழையாக பொழிந்துக்கொண்டிருந்தது, அதை எல்லாம் அச்சில் ஏற்ற முடியாது. அவர் மனைவியை நினைத்து ரொம்ப துக்கித்தேன். அவனை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. ஆனால் உள்ளூர் மக்கள் எல்லாம் எருமை மாட்டின் மீது மழை பொழிவது போல தங்கள் உலகில் சஞ்சாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு எருமையாக அவனை வெறித்திக்கொண்டிருந்தேன். கண்டிப்பாக எங்கள் மதுரை ஏரியாக்களில் பெண்ணை இவ்வளவு ஆபாசமாக பேச முடியாது, மற்ற எல்லாரும் திட்டி அவனை இறக்கிவிட்டிருப்பார்கள்.

பார்வையை மேயவிட்டால் அங்கே ஒரு "middle age minor" ஒரு பெண் மீது இடித்துக் கொண்டும் தடவிக் கொண்டும் இருந்தான். அவள் அவனிடமிருந்து விலக முற்பட்டு கூட்ட நெரிசலில் விழி பிதுங்கிக்கொண்டிருந்தாள். யாரும் இதெல்லாம் பெரிய விஷயமாக க்ருதியதாக தெரியவில்லை. நானும் "நமக்கு எதுக்கு வம்பு" என்று சிந்தனையில் இறங்கிவிட்டேன்.வியர்வை புழுக்கத்தில் செத்துவிடுவேன் போலயிருந்தது. கண்ணை வெளியில் மேயவிட்டால், வள்ளுவர் கோட்டம் அருகே "காதலர்கள்" இன்றோடு உலகம் அழிந்துவிடும் போல மாய்ந்து மாய்ந்து மடியிலும், கண்ணிலும் உதட்டிலும் மெய்மறந்து தொலைந்துக்கொண்டிருந்தனர். "work hours"ல் இப்படி இருக்கிறார்கள், இதில் எத்தனை legitimateஒ யார் கண்டார். அதற்குள் உட்கார சீட்டு கிடைத்துவிட்டதால் கண்ணை மூடிக்கொண்டு அரை தூக்க நிலைக்கு சென்று விட்டேன்.

ஒரு வழியாக "stop" வந்தது. அம்மாவும் நானும் இறங்கும் வேளையில், அம்மாவின் handbagலிருந்து யாரோ purseஐ அடித்துவிட்டார்கள். இதற்காகவே "திமுதிமு" என்று ஒரு கூட்டம் ஏறியது போலயிருந்தது. அம்மாவும் நானும் பஸ்ஸை நிறுத்த சொல்லி கத்தினோம், ஆனால் கண்டுக்கொள்ளாமல் எடுத்து விட்டனர். கிட்டத்தட்ட பாட்டியின் வைத்திய செலவுக்காக நாங்கள் எடுத்து வந்த 2000ரூபாய் "போயிந்தே". நான் மீண்டும் பஸ்ஸை விரட்ட முற்பட்டேன், அருகிலிருந்தவர்கள் எல்லாம் என்னை நிறுத்தி அதனால் பயன் ஒன்றுமில்லை என்றும், போலீஸ் துணையுடனேயே pickpocketகாரர்கள் செயல்படுவதால் அதை தடுக்க நம்மால் இயலாது என்றும் தெரிவித்தனர்.

அம்மா மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளை தேற்றி மாமா வீட்டுக்கு போயிருந்தோம். மாமா "F-channel" பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மகள் கோமதி அவரை பார்திக்கொள்ள வந்திருந்தாள், அவளுடைய 5 வயது பையன் "சந்தோஷ்" பக்கத்திலிருந்து பார்த்துகொண்டிருந்தான். கோமதி எனக்கு காபி போட கிச்சனுக்கு போக அம்மா கூடவே செண்றாள்.

மாமா என்னிடம் "இப்போ குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா, இல்லன்ன உன்கிட்ட "ஜானி வாக்கர்", "சிவாஸ் ரீகல்" வாங்கிட்டு வர சொல்லாம்னு இருந்தேன். ஆயிரந்தான் சொன்னாலும் இதையல்லாம் விட முடியுமா?, முன்ன அளவுக்கு smoke பண்றதில்லன்னாலும் யாருக்கும் தெரியாமா அப்பொப்பொ" என்று ஒளித்து வைத்திருக்கும் கோல்டு ப்ளாக் கிங்ஸ்யை காண்பித்தார். குழந்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். கோமதி காபியோடு வந்தாள், மாமவிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி ஏதோ சீரியலை போட்டாள். "நான் கட்டினது வேணா உங்கப்பாவா இருக்கலாம், ஆனா நான் லவ் பண்றது உன்னை தான், உனக்கு தான் குழந்தை பெத்து தருவேன்" என்று சவால் விட்டுக்கொண்டிருந்தாள். குழந்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சீரியல் முடிந்ததும் ஏதோ சினிமா பாட்டு நிகழ்ச்சி வந்தது. எல்லோரும் ஏதோ பேச தொடங்கிவிட்டார்கள். ஆனால் திரையில் ஹிரோ ஹீரோயினை கண்ட இடத்தில் தொட்டும், உரசியும் காதலித்துக்கொண்டிருந்தான். அவளும் வசதியாக கொஞ்சமாக உடுத்தியிருந்தாள். குழந்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சினிமா trailer வந்தது. தடிதடியான் பலரும் திரயில் ஒரு சுள்ளான் நடிகரால் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தார்கள். குழந்தை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று உள்ளே போய் பெரிய பொம்மை துப்பாக்கி எடுத்து வந்து எல்லோரையும் சுட்டான். நாங்கள் எல்லாம் சிரித்தோம்.

எனக்கு மட்டும் எதிர்காலம் நினைத்து பயமாக இருந்தது. ஏனென்றால் நான் பஸ்சில் வரும்போது பார்த்த பலரும் குழந்தையாக இருக்கும் போது சந்தோஷ் தினம் தினம் பார்க்கும் நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை, கொஞ்சம் கம்மியாக தான் பார்த்திருப்போம்.