People I know

Thursday, August 24, 2006

கலி வசிக்கும் இடங்கள்

கிருஷ்ணரால் உயிர்பிக்கப் பட்டவனும் அபிமன்யுவின் மகனுமாகிய பரிஷித் ஒரு முறை காட்சி ஒன்றை கண்டான். தர்மம் பசு வடிவம் தாங்கியிருப்பதுவும் அவளுடைய நான்கு கால்களாகிய தவம் தூய்மை தயை சத்யம் என்னும் நான்கு கால்களில் மூன்றை ஆசை, சந்தேகம், கர்வம் கொண்டு உடைத்து விட்டு நான்கவது காலை அசத்யம் கொண்டு உடைக்க கலிபுருஷன் முற்படுவதையும் கண்டான். உடனே கோபம் கொண்டு கலியை கொன்றுவிட துணிந்தான். அப்பொழுது கலி புருஷன் பரிஷித்திடம் சரணடைந்து தான் தனது கடமையை மட்டுமே செய்வதாகவும், அதணால் தன்னை கொல்லாமல் தனக்கு வாழ வழி செய்யவேண்டும் என்வும் கேட்டான். அதற்கு பரிஷித் மகராஜா மனம் இரங்கினார் (சரணடைந்தவர்களை கொல்ல கூடாது என்பது ஒரு ராஜ தர்மம்).
கலியிடம் "சூதாட்டம், குடி, பெண்களை இழிவாக நடத்துமிடங்கள், பிராணிகளை வதைக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்" என்றார். கலி வசிக்க மேலும் சில இடங்களை கேட்கவும் "பொய் பேசப்படும் இடங்கள், காமம், கர்வம், பொறாமை, துவேஷம் நிறைந்த இடங்களில் வசிக்கலாம் . கலியால் பீடிக்க பட கூடாது என்றால் இவ்விடங்களை தவிர்க்க வேண்டும்" என்று கூறினார். இந்த கதை பாகவதத்தின் தொடக்கத்தில் வருகிறது.

ஸுகர் பாகவத புராணத்தை பரிஷித் மகராஜனுக்கு உபதேசிக்கு முன் ஒரு ஆசைகளை துறந்து வாழ்வதை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுகிறார். அப்பொழுது வீடுகளில் வாழ்வதை காட்டிலும் குகையிலே வாழ்வது சிறந்தது என்கிறார். நமது முன்னோர்கள் தொடங்கி இன்றும் கூட ரமண மகரிஷி போன்றோர் குகையிலே வசித்து வந்ததை அறிவோம். ஆனால் நம்முடைய புத்தகங்களோ குகையில் வசித்து இயற்கையோடு ஒத்து வாழ்ந்தவர்களை காட்டு மிராண்டிகளாக விவரிக்கின்றன. எனக்கு என்னமோ முன்னோர்கள் சகல அறிவையும் பெற்றிருந்த போதிலும் இயற்கையுடன் ஒத்து வாழ்வதே சிறந்தது என அறிந்து வந்ததால் எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. இல்லாவிட்டால் நாம் முன்னோர்கள் மாபெரும் காப்பியங்கள் இயற்றி பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் என்று நம்பும் வேளையில் மேற்கத்தியர் நம்மை குகையில் வாழ்ந்த காட்டு மிராண்டிகள் என்று ஆதரங்களுடன் கண்டுபிடித்திருப்பதாக சொல்லிக் கொள்வதற்க்கும் சமாதானம் காண முடியாது.

நன்றி: துக்ளக்கில் தற்போது "சோ' அவர்களால் எழுதப்படும் "இந்து மகா சமுத்திரம்" தொடர்.

"சூதாட்டம், குடி, பெண்களை இழிவாக நடத்துமிடங்கள், பிராணிகளை வதைக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்" என்று பரிஷித் கூறிய போது கலி நினைத்திருப்பான் " பெண்கள் குடித்து விட்டு தங்களை தாங்களே இழிவாக நடத்திக் கொண்டு அதில் பெருமைபடக்கூடிய club/bar/casino கள் மிகுந்த காலத்தை வர வைப்பேன். அது கூட தெரியாத இவனிடமெல்லாம் நான் சரணடைய வேண்டியிருக்கிறது, nonsense!".

7 Comments:

  • nalla post, pb...

    i always get to know something from your blogs...

    ur blog is a classic :)

    By Blogger Prabhu, at 9:07 AM  

  • prabhu
    thanks da..I dunno u get to know something or not, I get some comments from u..illana yarume padikatha blog nu ellorum ninaichuduvanga...

    By Blogger P B, at 9:34 AM  

  • haahaahaa.. pb unga final touch sooper...
    naan nalla info kathukitten!!

    By Blogger Maayaa, at 4:35 PM  

  • priya
    enna thideernu enga blog side ellam..anyways thanks.

    By Blogger P B, at 7:58 AM  

  • hello
    neenga orruku poyirundha podhu naan unga blogspota thirutu pogaama pathukitten theriyuma???:)-

    By Blogger Maayaa, at 9:10 AM  

  • Priya - LOL !!

    Ippo ellam neraya joke aaa adichu thaakkare priya ? Enna vishayam ? :)

    By Blogger dinesh, at 10:36 PM  

  • good one... interesting write up

    By Blogger Sapadu to random musings.😁, at 9:26 AM  

Post a Comment

<< Home