People I know

Friday, July 28, 2006

அறிந்தும் அறியாமலும்

நண்பன் ஒருவன் ஒருமுறை சொன்னான் நமக்கு விருப்போ வெறுப்போ ஒரு பொருளை தெரியாத வரை மட்டுமே இருக்கிறது, முற்றும் புரிந்து கொண்டுவிட்டால் அதனுடன் சமாதானம் மட்டுமே கொள்ள முடியும் விருப்பு வெறுப்பு ஏற்படுவதில்லை. அவன் சொன்னது யோசித்து பார்த்தவரை சரியென்றே பட்டது. இருந்த போதிலும், நமக்கு தெரியாத விஷயங்களை எண்ணிப் பார்க்கும் போது தெரிந்த விஷயங்கள் கடற்கரையில் ஒரு மணல் துளி அளவே இருக்கிறது. தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதின் மூலமாக தீர்க்க முடியும் என்பது இயலாத காரியம். அதணால் மனிதன் தனக்கு தெரியாதற்கெல்லாம் ஒரு பெயர் வைத்துவிட்டான். தனக்கு தெரியாததெல்லாம் ஒரு உருவத்திற்குள் அடைத்து அதற்க்கு கடவுள் என்று பெயர் வைத்துவிட்டான். காரணம் தெரியாமல் ஏதேனும் நடந்துவிட்டால் "கடவுள் செயல்", நமக்கு பிரச்சனைக்கு தீர்வு தெரியவில்லையென்றால் "அவன் இருக்கான் பாத்துப்பான்" என்கிறான்.

தெரியாதவைகள் மிகவும் பயமுறுத்துகின்றன சிலநேரம். வீட்டில் பெண் பிள்ளையோ, கடைகுட்டியோ நேரத்துக்கு வரவில்லை என்றால் "கடவுளே பத்திரமாக அழைத்து வந்துவிடு" என்று தெரியாததை வெண்டுகிறோம். பயமுறுத்திய தெரியாததே தான் பயம் போக்குவதாகவு ஆவதை காண்கிறோம். சில சமயம் தெரியாதது நமக்கு இருட்டாக தெரிகிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது. ஆனால் சில சமயம் தெரியாததே ஒளிமயமாகவு தெரிகிறது. "தெரியாதது" எல்லா வகையான எதிர்மறை (paradoxical) குணங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. அதன் இருப்பு சத்தியாமாக கண்ணுக்கு தெரிந்தாலும், சில தெரியாதவர்கள் தெரியாததன் இருப்பை ஒப்புக் கொள்வதில்லை. எனக்கு தெரிந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பவர்கள்து வாதம் self contadicting என்பதை அறிவதில்லை. தெரியாததை நாங்கள் கடவுள் என்கிறோம், நீ எதை தெரிந்துக்கொண்டாலும் அது கடவுளாக இருக்க முடியாது. அப்பொழுது நாத்திக வாதம் சொத்தையாக படுகிறது.

ஆமாம், கடவுள் என்பது தெரியாத பொருளே தான். அதை உணர மட்டுமே இயலும், தெரிந்துக்கொள்ள முடியாது. இப்படி எல்லாம் யேசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நண்பன் ஒருவன் ஞாயபகம் வந்தது. அவன் தனக்கு தெரியாதற்கெல்லாம் "ஹிந்தி" என்று பெயர் வைத்திவிடுவான். வெள்ளைகாரர் ஆங்கிலத்தில் சொல்வது புரியவில்லை என்றால் கூட "இந்த ஆள் எப்படி ஹிந்தில பேசறார்னே புரியல" என்பான். என்ன செய்வது தெரிந்த விஷயங்களை நாம் படுத்துகிறோம், தெரியாதவைகள் நம்மை படுத்துகின்றன.

2 Comments:

  • Machi...semma article da !! Polandhutte...

    In Agreement about the "kadavul" part. Theriyaadhadhu, iruttu idhu ellathayum kadavul or supernatural force kku attribute seyyaradhu nature. That includes me ! Kurudhi punal la vara maari, even the strongest of men have a breaking point. Adha thaandi pona, avanum "kadavul" or "theriyaadhadhu" nambi dhaan vaazharaan !

    LOL at your Hindi comment ! Paavam da Kozhandhai :)

    By Blogger dinesh, at 2:52 PM  

  • HI nickel break,
    Energy irukartha namaku solra namma conciousness allathu sitham thaan kadavul, athu sath and ananda vadivam kondathu enbathu periyavanga sol.


    Sorry me in india, could not type in tamil

    By Blogger P B, at 7:34 AM  

Post a Comment

<< Home