People I know

Monday, July 10, 2006

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரு

சம்சப்தகர்கள் என்பவர்கள் அர்ஜுனனுடன் போரிட்டு கொல்வது அல்லது வீரமரணம் அடைவது என்று சபதம் செய்து அர்ஜுனனை பதிமூன்றாம் நாள் யுத்ததில், யுத்தகள்த்திலிருந்து வெகு தூரம் இழுத்து சென்றுவிட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களை கொன்று பாசறைக்கு திரும்பும் போது பாசறையே மிகவும் அமைதியாக இருந்தது. அனைவரும் துக்கதுடன் இருந்தார்கள். மெதுவாக தர்மபுத்திரர் அபிமன்யு இறந்துவிட்ட விவரத்தை தெரிவித்தார். பத்மவ்யூகத்தில் அபிமன்யு மட்டும் தனித்தி விடப்பட்டதும், ஜயத்ரதன் மற்றவர்களை வ்யூகத்தின் வாயிலிலேயே நிறக வைத்ததால் யாரும் அவனுக்கு உதவியாக பிந்தொடர்ந்து செல்ல இயலாத நிலையில் கவுரவர்கள் கயமையால் அவனை கொண்றுவிட்டார்கள் என்று தெரிவித்தார். அந்நிலையில் துக்கம் தாங்க இயலாத சகோதரர்கள் அனைவரயும் ஏசினான், அழுது புரண்டான். அர்ஜுனன் ஒரு பெரும் சபதம் செய்தான் "நாளை சூரிய அஸ்தமனதிற்குள் ஜயத்ரதனை நான் கொல்லாவிட்டால் தீக்குளிப்பேன்" என்று சபதம் செய்கிறான்.

மறுநாள், கவுரவர்கள் ஜயத்ரதனை போர்களத்திலிருந்து ஒளித்து வைத்துவிடுகிறார்கள். கிருஷ்ணர் சூரிய அஸ்தமனம் நெருங்கி வரும் வேளையில் தனது சக்கிரத்தால் சூரியனை மறைத்து விடுகிறார். எல்லோரும் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டது என்று மகிழ்கிறார்கள். அர்ஜுனன் திக்குளிக்க தீ வளர்க்கிறான். அக்காட்சியை காண ஜயத்ரதன் அங்கே வருகிறான். கிருஷ்ணர் உடனே தனது சக்கரத்தை விலக்கி கொள்ள, சூரியன் வெளிவருகிறான். அர்ஜுனன் உடனடியாக அம்பை எய்தி ஜயத்ரதனை கொல்கிறான்.

பாசறைக்கு திரும்பிய உடனே கிருஷ்ணர் அர்ஜுனனை கோபிக்கிறார். "உணர்ச்சி வசப்பட்டு எல்லோருக்கும் சிக்கலை உண்டாக்க பார்த்தாயே, போர்கள்த்திலே இறந்து போகிறவர்களை நினைத்து வருந்தக்கூடாது, கடமையை செய் பலனை எதிர்ப்பார்காதே என்று நான் சொன்னதை மறந்து விட்டாயா?" என்றார். அர்ஜுனன் "க்ருஷ்ணா சொல்லுதல் யார்க்கு எளிது, ஆனால் சொல்லிய வண்ணம் நடப்பது மிகவும் கஷ்டம், புத்ர சோகத்தை பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ? இன்னமும் என் நெஞ்சு எரிந்து கொண்டுதான் இருக்கிறது." என்றான். கிருஷ்ணர் அவவை தனிமையில் விட்டு விட எண்ணி விலக முற்படும் போது அர்ஜுனன் திடிரென்று நினைவு வந்தவனாக "க்ருஷ்ணா, இவ்வள்வு நாளாக நீ எங்களுடன் நின்று எதிரிகளை கொல்வதற்க்கு எவ்வளவோ உதவிகள் செய்கிறாய். ஆனால் உன்னுடைய சேனையும், உன் மகன்களும் கூட துரியோதனன் பக்கம் நின்று சண்டை போடுகின்றன. உன் மகன்கள் எல்லாம் என்ன ஆனார்கள், எப்படி சண்டையிடுகின்றனர்?" என்று கேட்டான். கிருஷ்னர் "அர்ஜுனா இன்று உன் மகன் இறந்த துக்கம் தாங்காமல், நீ ஜயத்ரதனை போர்கள்த்திலே தேடுவதற்காக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தாய். நானும் அதற்க்கு உதவியாக ஆலோசனை கூறிக்கொண்டு உன் தேரை ஓட்டினேன். அவ்வாறு நீ என் மகன்களில் ஓரிருவரை தவிர எல்லோருக்கும் வீர சுவர்கம் கொடுத்துவிட்டாய். இந்த சண்டை முடியும் போது எனக்கு மகன்களே இல்லாமல் கூட போகலாம். ஆனால் நான் துக்கிப்பதில்லை. உண்மையில் யாரும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்று உனக்கு உபதேசம் செய்ததை மறந்துவிட்டாயா?" என்றான். அர்ஜுனன் "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரு" என்று காலில் விழுந்து பணிந்தான்.

*உண்மையில் கிருஷ்ணரின் மகன்களை யார் எப்பொழுது கொன்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் மகன்கள் எல்லாம் இறந்த நிலையில் க்ருஷ்ணர் துக்கிக்கவில்லை என்று தெரியும்.

5 Comments:

  • PB interesting...
    I actually didnt even know Krishnar had sons and they fought for the Kauravas.

    By Blogger Prabhu, at 11:39 AM  

  • PB interesting...
    I actually didnt even know Krishnar had sons and they fought for the Kauravas.

    By Blogger Prabhu, at 11:45 AM  

  • Krishna sent his army to fight for duryodhana..he has also promised him that he will not fight in this war..hope u know the story of arjuna and duryodhana went to meet sri krishna same time to get his support in that war.

    By Blogger P B, at 8:46 AM  

  • Andha story theriyum, that Arjuna sat next to krishna's legs, duryodhana near his head...

    but i didnt know Krishna had his sons fighting against the Pandavas.

    By Blogger Prabhu, at 11:53 AM  

  • தனக்கு வரும் துன்பம் மட்டுமே துன்பம். அடுத்தவர்கல்ளுக்கு வரும் துன்பத்தி நினைத்துப் பார்ர்க்காத நிலை இன்று சகஜமாய் இருக்கிற்து.
    யுத்தத்தில் மடிகிறவரகளிப்பற்றி நினிக்கக்கூடாது எனும் க்ருஷ்ணரின் வாக்கு எத்தனை ஆழமானது

    By Anonymous Anonymous, at 1:12 AM  

Post a Comment

<< Home