People I know

Tuesday, October 03, 2006

பிறவித் துன்பம்.

கரு உண்டாகிய ஐந்து நாள் வரை குழந்தை வட்டமாக நுரை வடிவில் இருக்கும். பத்து நாட்களில் எலந்தப் பழம் போல கட்டியாக இருக்கும். பிறகு மாம்ஸ பிண்டம் போல இருக்கும். முதல் மாதத்தில் தலை உண்டாகிறது. இரண்டாவது மாதத்தில் கை கால் உண்டாகிறது. 3வது மாதத்தி நகம், முடி, எலும்பு, தோல், பிறப்புறுப்பு (Genital organs),காது ஓட்டை, மூக்கு ஓட்டை இதெல்லாம் உண்டாகிறது. நான்காவது மாததிதில் தோல், ரத்தம், மாம்சம், மேதஸ் (?), எலும்பு மஜ்ஜை (bone marrow), சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்கள் உண்டாகின்றன. ஆறாவது மாதத்தில் கர்ப்ப பையால் சுற்றப்பட்டு அம்மாவின் வயிற்றில் வலப்பக்கமாக சுற்றி வரும்.

ஏஷாவது மாதத்தில் ஜீவனுக்கு ஞானம் கிடைக்கிறது. போன ஜென்மங்களின் தொடர்ப்பு, தான் பிறக்க வேண்டிய காரணம் எல்லாம் தெரிகிறது.
தாய் உண்ணும் உணவு பருகும் பாணங்கள் கொண்டு குழந்தை வள்ர்க்கிறது. குழந்தையின் தொப்புளில் "ஆப்யாயினி" என்ற நாடி கட்டப்படுகிறது, அதன் மறு முனை தாயின் குடலின் ஓட்டையில் கட்டப்படுகிறது. இனி தாயார் சாப்பிட்டது, குடித்தது எல்லாம் குழந்தையின் வயிற்றுக்கும் போய் சேருகிறது.

இவ்விதம் குழந்தை வளரும் குழந்தை ஏராளமான புழுக்கள் உண்டாககூடிய மலம் மூத்திரம் நிரம்பிய குழியில் படுத்திருக்கிறது. அதிலுள்ள புழுக்கள் குழந்தையை கடித்து துன்புறுத்துவதால் குழந்தை அடிக்கடி மயங்குறது. தாய் உண்ணும் உணவில் இருக்கும் உப்பு, உறைப்பு, கசப்பு, தித்திப்பு எல்லாம் குழந்தையை துன்புறுத்தும்.தன்னை சுற்றி கர்ப்பப்பை, மாலை மாதிரி குடல், வளைஞ்ச முதுகு-கழுத்து, வயிற்றில் தலையை வளைத்துக் கொண்டு குழந்தை அங்கேயே கிடக்கிறது. இந்த நேரத்தில் முற்பிறவியின் கதை எல்லாம் தெரிகிறது. ஏழாவது மாதத்தில் பிரசவக் காற்று குழந்தையை அசைக்க தொடங்கும். பத்தாவது மாதத்தில் துன்பம் தீர பிரசவ காற்று தலை கீழாக வெளி தள்ள குழந்தை பிறக்கிறது.

-- மார்க்கண்டேய புராணத்தில் இருப்பதாக சக்தி விகடனில் படித்தது.

நவீன மருத்துவமும் இதையே தான் சொல்கிறது. நான் படித்த "உச்ச தலை முதல் உள்ளங்கால் வரை" என்ற புத்தகத்தில் கூட இப்படி தான் போட்டிருந்தார்கள். முன்னோர்களுக்கு இந்த scanning அறிவு எப்படி கிடைத்தது என்றே தரியவில்லை. நாமெல்லாம் கெட்டவர்கள், அவர்களுடைய scanner ஐ கொடுத்தால் அதை கொண்டு பெண் சிசுக்களை abortion செய்ய மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை கூட தெரிந்து தான் நம்மிடமிருந்து மறைத்து விட்டார்களோ என்னமோ?

பொதுவாகவே ஆன்மீக பாடல்களில் பிரசவத்தில் குழந்தை படும் வேதனைகள் பற்றி பாடி வைத்திருக்கிறார்கள். ஆகையால் மார்கண்டேய புராணத்தில் இடை செருகல் இதெல்லாம் என்றும் சொல்ல கூடியவர்கள் கூட நம் முன்னோர்கள் கர்ப்ப கால கஷ்டத்தை பற்றி தெரிந்து வைத்திருந்தவர்கள் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

6 Comments:

  • pb,
    yup. porakarthukkum kasta padarom,poranthathukkaparamum than.
    amma bhagavathathula potatha sonna :
    "In the ninth month, Lord Narayana Himself is present in the womb near the child. His affection provides succor to the kid. At the time of birth, bring born in an alien world, in which nobody is known and the disappearance of swami makes the child cry. "
    nice write up...

    By Blogger Vanjula, at 7:37 PM  

  • Vettayaadu velayaadu padame thevalaam pola irundhadhu ! :)

    By Blogger dinesh, at 1:28 PM  

  • pb supera ezhuthirka ...
    Vasu

    By Anonymous Anonymous, at 11:07 AM  

  • pb..nalla info..
    adhu sari..maarkandeya puranam edhukku padicheenga.epdi padicheenga?.adhu edhappathi? briefaa sollunga..

    By Blogger Maayaa, at 2:46 AM  

  • hello ...
    commenta post mattum panneengale.. badhila kaanume

    By Blogger Maayaa, at 1:37 PM  

  • Athan sakthi vikatan la padichen nu potrukene..avlo thaan therium. Nothing more.

    By Blogger P B, at 1:43 PM  

Post a Comment

<< Home