People I know

Saturday, August 26, 2006

எல்லாம் தெரிந்தும் கொஞ்சம் தெரிவதில்லை!

குடும்பம்:
"என் பையனுக்கு நான் guarantee ங்க"
"ஆமா அவன் foreign ல தான் இருக்கான், ஆனா நம்ம கலாசாரம் தான் அவனுக்கு பிடிக்கும், ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, படிக்கிற காலத்துல வாராவாரம் கோயில் குளம்னு சுத்தின பய தான்".

"ஆமாங்க சீக்கிரம் இங்கயே வந்திரனும்னு தான் சொல்லிகிட்டு இருக்கான். வாராவாரம் அங்க இருக்கிற கோயில்களுக்கு போனாக்கூட நம்ம மீனாட்சி அம்மன் கோயில் மாதிரி வராதுமா, சீக்கிரமே india வந்து settle ஆயிடனும்னு சொல்லிகிட்டு இருக்கான்".

"என்னது எங்களுக்கு தெரியாமயா, எங்க பையன் அப்படி கிடையாதுங்க, எங்களுக்கு தெரியாமா அவன் எதுவும் செஞ்சது இல்லை. அவன பத்தி அவனை வளத்த எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்க வார்த்தைய தட்ட மாட்டான், நீங்க நம்பி ஜாதகத்த அனுப்புங்க".

"சந்தோஷம், அப்ப வர வெள்ளி கிழம நல்ல நாள் அன்னிக்கே வந்து பொண்ண பாக்குறோம், அவனுக்கு photo வ Email பண்ணிட்டோம்"

"அதெல்லாம் நாங்க சொன்னா போதும். ஒத்துப்பான்"

"சரி வெச்சிடறேன்"

அம்மா மீனாட்சியம்மாள் யாரோ பெண் வீட்டுக்காரர்களிடம் பேசிவிட்டு போனை வைததாள். அப்பா சுந்தரேசன் "என்னடி நம்ம பையனுக்கு 24 வயசுதானே ஆகுது, ஏன் இப்படி அவசரமா பொண்ணு பாக்குற. அவன் எண்ண நினைச்சுகிட்டு இருக்கானோ என்னமோ? அதான் அடுத்த வாரம் வரானே அதுவரை பொறு அவன கேட்டு முடிவு செய்வோம்" என்றார்.

"விவரமில்லாம பேசறதே உங்க பொழப்பு. அவன எப்படியாவது வழிக்கு கொண்டு வந்து பாத்து வெச்சிருக்கிற நாலு அஞ்சு பொண்ணுகள்ள ஒன்ன் முடிச்சிபுடுவோம். இந்நேரம் அவன் என்ன பண்ணிகிட்டுயிருக்கான்னு யாரு guarantee கொடுக்க முடியும், அவன் காலேஜல படிக்கிற காலத்திலயே வாரா வாரம் கோயிலுக்கு போறேன்னு அங்கன ஒரு பொண்ணு கூட சுத்தின பய தானே, நமக்கே தெரியாம கல்யாணம் பண்ணிக்க போய் ஜாதி பிரச்சனை ஆகி அவன அடிச்சி போடவும், நமக்கு ஆஸ்பத்திரில வேச்சு கொஞ்சம் விவரம் சொன்னான். அவன நம்ப முடியாதுங்க, எப்படியாவது பேசி ஒரு இடத்துல நிச்சயம் பண்ணிடணுங்க, இல்லன்னா இன்னும் என்னென்ன பாக்க வேண்டியிருக்குமோ?" என்று கூறினாள். சுந்த்ரேசன் பெருமூச்சு ஒன்றை பதிலாய் எறிந்தார்.

தெய்வம்
"பெருமாளை சர்வக்ஞன் (அனைத்தும் அறிந்தவன்) என்று கூறுவதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம், அவனுக்கு அடியார்களிடம் உள்ள சிறு சிறு குறைகள் தெரிவத்தில்லை, அவர்களை அதற்காக தண்டிக்காமல் அருளை பொழிவதால், பெருமாளே உனக்கு எல்லாம் தெரியும் என்கிற கருத்தை எதிர்க்கிறோம்"

- கூரத்தாழ்வார்.

தொண்டர்:

மாசில் வீணையும் மாலைமதியமும்
வீசு தென்றலும் வீன்க்கிள வேனிலும்
மூசு வண்டறை பொயகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
- அப்பர் பெருமான்.

குற்றமில்லாத வீணையின் நாதம், மாலையில் வீசும் முழு மதி, வீசும் இனிமையான தென்றல், இள வேனிற்காலம், வண்டுகள் மொய்கின்ற பொய்கை போன்றது சிவபெருமானின் திருவடிகள் என்றார். சிவபெருமானின் இணையடி தரும் குளிர்ச்சி தெரிந்து பாடும் வேளையில் தான் மிக கொடிய வெப்பம் மிகுந்த சுண்ணாம்பு காளவாயில் நின்றுக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இவரை போய் ஞானி என்று அழைப்பது எங்ங்னம் தகும்.





4 Comments:

  • pb..unga yosainai ellam balamma irukku..sama analogy ponga!!1

    By Blogger Maayaa, at 9:15 AM  

  • pb. again. good one.
    kalakiteenga.
    ana enga koduthu erukara uvamai and uvameyam rendum opposite sense la eruke!!!

    Emperumanoda perumaigalaiye padam varigal. maganin pithukalai varnikkum thai.

    anyways, cool one

    By Blogger Vanjula, at 10:01 AM  

  • aama yaarkume ellam therinjirukarthillai..amma ku pillai pathi, kadavuluku bhakthan pathi, unarchi vasa patta nilayil nammaku nammai pathiye

    By Blogger P B, at 10:08 AM  

  • PB,
    nalla story and good repartee for Koorathaazhvar's comment...

    By Blogger Prabhu, at 3:33 PM  

Post a Comment

<< Home