People I know

Thursday, January 11, 2007

செயற்கை

கூரையின் மேலே கூட புல் தரை போடுகிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. அப்படி தான் அன்று ஒரு நாள் நான்கவது மாடியில் நின்றுக் கொண்டு குனிந்து இரண்டாவது தளத்திலிருக்கும் புல் தரையை பார்த்துக் கொண்டிருந்தேன். மிக பசுமையாக இருந்தது. யாரோ தினமும் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள் போல. ரம்மியமாக தான் இருக்கிறது. ஆனால் வெயில் கொஞ்சம் ஏறினாலோ, காற்று கடுமையாக அடித்தாலோ தாங்குமோ தெரியவில்லை. செயற்கையாக இருப்பதால், நம் காதலை போலவே சோதனைகளை தாங்காது என்றே எண்ணுகிறேன்!