People I know

Wednesday, August 15, 2007

தண்ணீர் விட்டா வளர்த்தோம்!

காந்திக்கும் தனது குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் காந்தி என்ற பெயரை சேர்த்து மக்களை ஏமாற்றினார் இந்திரா. அவரை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவிற்கு அவருடைய மருமகள் சோனியா இருக்கிறார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆகும் வரை இந்திய நாட்டு குடியுரிமை கூட கோராதவர் திடிரென்று நாட்டிற்க்கு பெரும் தியாகம் செய்தவர் ஆகிவிட்டார். ஆமாம் அவர் செய்த தியாகம் தான் எவ்வளவு!
பதவி மீது மோகமே இல்லாவிடாலும் தனக்கு மெஜாரிட்டி எம்.பி. களின் ஆதரவு இருப்பதாக ஜனாதிபதியிடம் பொய் கணக்கு காட்டி ஆட்சியை கவிழ்த்து பிரதமர் ஆக ஆசை பட்டார். அதணால் போனது வாஜ்பாய் ஆட்சி மட்டுமின்றி நாட்டிற்கு மறுதேர்தல் மூலம் பெரிய செலவு வைத்தார்.
தன் கண்வரை கொன்றவர்களுக்கு உதவி புரிந்தனர் என்று ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பதவிக்காக கூட்டு வைத்தார். நல்ல வேளை கலாம் அதற்கு வேட்டு வைத்தார். அதற்கு பழி வாங்கும் வகையாக central govt ல் ஒரு பன்னீராக சிங்கை ஆக்கினார். ஆத்திரம் தீராமல் கலாமுக்கு ஆப்பு வைத்தார்.
அப்படியும் பதவி வெறி அடங்காமல் கேள்விக்குறிய தகுதிகளுடைய குற்றச்சாட்டிற்க்கு ஆளான ஒரு பெண்மனியை குடியரசு தலைவியாக்கி கூத்தடித்தார். இத்தனையும் எதற்க்காக? தான் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக! ஆடுத்து நமது மத்திய பன்னீர் செல்வத்திற்கு ஆப்படித்து இவர் பிரதம்ர் ஆகும் நாள் நெருங்கி விட்டதாக பட்சிகள் கூறுகின்றன!
சர்வேசா! இந்த தேசம் என்னும் பயிருக்கு தண்ணீராக குருதியை பாய்ச்சிய தியாகிகள் பலர். அவர்களுக்காகவவது பாரதத்தை காப்பாற்று! நெஞ்சு பொறுக்கவில்லை ஐயனே!


குறிப்பு:
தனது உறவினர் குவட்ரோச்சியை காப்பாற்ற அம்மையார் ஆடும் தில்லாலங்கடி ஆட்டம் எல்லோரும் அறிந்ததே! பேசாமல் அவரை ஜனாதிபதி ஆக்கி இருக்கலாமே திருமதி காந்தி. எங்கள் ஓட்டு பிச்சைகார ஊழல் எம்.பி.க்கள் நீங்கள் நாயை நிறுத்தினாலும் ஓட்டு போடுவார்களே! நீங்கள் பீரதமர், க்வட்ரோச்சி ஜனாதிபதி. 60 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சிக்கு நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் யாரேனும் இருந்தால் புள்காங்கிதம் அடைந்திருப்பார்கள்!!!